கவிஞர் சாரதிதாசன் பயிற்சியால் பாடு பெற்ற கவியரசு. இறையாற்றலை எண்ணிப் பாடும் ஏந்தல். கூத்தனூர்க் கலைவாணி அருள் தரவேண்டும் என்று 100 வெண்பாகள் பாடியுள்ளார்.
வாழ்த்தி வரம்தருவாய் வற்றாத ஆனந்தத்(து)
ஆழ்த்தி அருள் புரிவாய் அன்னைசிரம் - தாழ்த்தியுனைப்
போற்றிஅருள் பாக்கள் பொழியவே கூத்தனுர்
வீற்றிருப் போய்!அருள்க வே. - இது ஒரு சுடர்.
இத் தொகுப்பில் ஸ்ரீ கலைமகள் திருப்பள்ளி எழுச்சி 10 விருத்தங்கள் கொண்ட ஒரு நூல். கலைமகளே பள்ளி எழுந்தருளாயே - என்று அவை முடிகின்றன.
ஸ்ரீ சகலகலாவல்லி சரணாகதிப் பதிகம் மற்றொரு நூல். சகலகலா வல்லி உனைச் சரண்டைந்தேனே என்று முடியும் 10 விருத்தங்கள் இதில் உள்ளன.
கலைமகளே கடைக்கண்ணைக் காட்டியருள் வாயே - என முடியும் 30 விருத்தங்கள் கொண்ட நூல் கலைமகள் அருள்மாலை.
- காலையும்
மாலையுமெப் போதும் மகிழ்வோடு மாண்பார் பா
மாலைகளைச் சூட்டி வணங்கஅருள்
- என்பது போல் 382 கண்ணிகளில் கலைமகள் கலிவெண்பா வேண்டுகிறது.
சாரதாம்பாள் பாமாலை 32 விருத்தம்
சரஸ்வதி துதி - 13 விருத்தம்
கலைமகள் கவிமாலை 30 விருத்தம்
சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கவிமாலை 100 விருத்தம்
சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் பஞ்சகம் 5 5 விருத்தம்
சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் பதிகம் 10 விருத்தம்
இத்தனையும் கொண்டது இந்த நூலின் தொகுப்பு.
பாடல்கள் மரபுக் கவிதைகள்.


